செவ்வாய், 4 டிசம்பர், 2012

நட்பே நீ ஓங்குக !

எதிர்பார்த்து சந்திக்கவில்லை,
சந்தித்ததும் சிந்திக்கவில்லை!
இருப்பினும் சந்தித்து விட்டோம் 
நட்பின் இலக்கணம் எழுத!

தலை நரைத்த பின்பும்
தலை முறை கடந்த பின்பும்
நாம் நினைத்து பார்ப்போம்
பழகிய நாட்களை!

பின்பு என்றோ ஒருநாள் சந்தித்தால்,
நன்றாகவே பழகினோம் என்று
மனம் அறிந்து பொய் உரைப்போம்,
நாம் கொண்ட சண்டைகளை
மனதில்நினைத்து கொண்டு !

இனிமையான பந்தம் என்று
அடிகடி உணருவோம்
நம் நட்பின் பெருமையை !

நட்பே நீ ஓங்குக !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக