புதன், 12 செப்டம்பர், 2012

புதிய பிரம்மா !

உறவுகளால் உணர்விழந்து,
நெசத்தால் நெஞ்சம் நோக ,
பாசத்தால் பழிகள் பழக,
வற்றியது என் நெஞ்சின் ஈரம் !
விழி உடைத்து
அரங்கேறியது கண்ணீரின் சரம்!
இனியும் ஏதும் எஞ்சவில்லை ,
புதிதாய் பறி கொடுப்பதற்கு!
அனைத்தும் சலித்திட ,
கட்டவிழ்ந்தேன் நானும்,
புதிதோர் உலகம் படைக்க!
நான் தான்,
புதிய பிரம்மா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக