புதன், 12 செப்டம்பர், 2012

கனவுலகின் கூத்தாடி !

கட்டு மாடி கட்டிடம்,
வெள்ளை கோட் சூட் ,
பென்ஸ் கார்,
சுழல் நாற்காலி . . . .
கண்கள் முழுதும் கனவுகள் தாங்கி
தோள்களில் புத்தக பை ஏந்தி,
பள்ளியிலிருந்து   திரும்பினேன் நான்!


ஆழி பேரலை,
சுனாமியாய் ,
சுண்டல் விற்றிருந்த
என் தந்தையை  விழுங்க ,
குழந்தை தொழிலாளியாய்
இன்று கல் சுமக்கிறேன்
ஓர் கட்டிடம் எழுப்ப  . . . !


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக