செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

எந்தன் நிழலின் நிஜத்திற்கு...


நிஜம் தானே கேளடா  - எந்தன்
நினைவெல்லாம் நீயடா!
எங்கோ உன் முகம் கண்ட ஞாபகம்
என்றோ உன்னுடன்  வாழ்ந்த ஞாபகம் !
எந்தன் இதய கடலில்
வீசும் புயற்காற்றில்
சிறகனேன் - நான்
ஒற்றை சிறகனேன்!
சுடும் தீயில் மெழுகானேன்
அணையும் மெழுகானேன்!
தேரில் வந்த தேவதைஎன - தங்க
தேரிலே வந்த சின்ன தேவதைஎன
எனை தலையில் வைத்தாடி;
தேரோட்டம் நிகழும் முன்னே -ஏனடா 
எடுத்தாய் நீ இறுதி ஓட்டம்?
நீ விதைத்த ஞாபக விதைகள் - எந்தன்
மனத்தோட்டத்தில் - உந்தன் நினைவு தளிர்கள்,
திரும்பி பார்க்கையிலே மரமாய் அசையுதடா;
பெரிதோர் மரமாய் அசையுதடா... 
நீ எனை பிரிந்தார் போல் - ஆம்
சொல்லிக்கொல்லாம் நீ எனை பிரிந்தோடியது போல்
காலமும் இங்கே விரைந்தோடுதடா !
நம் வாழ்க்கையும் ஓர் கதை ஆனதடா!
என் கண்ணீர் துளிகளில் - நான் சிந்தும்
செந்நீர் துளிகளில் ஈரம் என்றும் வாழுமடா!
பாரினிலே நீ மீண்டும் வந்தால் - தாயாக
எந்தன் தலை கோதும் தாயக - நானும்
உன் மடி தவழும் சேயாக மீண்டும்
ஓர் ஜனனம் கேட்பேன்! 
அப்பிறவியிலே
மரணதேரில் உனக்குமுன்
நான் நடந்து உன்னை அழைக்க எண்ணினேன்!
அந்தோ!!
நான் ருசித்த வலி - உன் பிரிவால்  
நான் புசித்த வேதனை வேண்டாமடா உனக்கு!
இருவரும் சேர்ந்து செல்வோம் சோர்வாகாமல்..!!!


1 கருத்து: