செவ்வாய், 28 ஜூலை, 2015

எங்கள் நாட்டில் இலையுதிர் காலம் . . .

எங்கள் நாட்டில் இலையுதிர் காலம்
இப்பொழுது 
எங்கள் நாட்டில் உதிர்காலம் !
"அறிவியசியல்" விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
மெல்லிசை  விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
எங்கள் குடும்ப விருக்ஷத்தின்
கிளையுதிர்காலம்!
எப்படி போகுமோ இனி எங்கள் எதிர் காலம் !

கடவுளுக்கு தன்னம்பிக்கை வேண்டுமோ?
கடவுளுக்கு விஞ்ஞான தாகமோ ?
கடவுளுக்கு விவசாய மோகமோ ?
விண் தொட வேண்டுமென
நின் கனவை நெனவாகிய கர்வமோ?

வழி நடத்த வேண்டிய நீர்,
விழிகளை ஈரமாக்கி,
வழியிலேயே விட்டு சென்றது ஏனோ. ?
எங்களை கனவு காண சொன்னீர் ,
ஏங்கி நிற்கிறோம்
இது கனவாக
ஒரு கெட்ட கனவாக
இருக்க கூடாதா என்று !!!
தமிழனை தலை நிமிர செய்தாய்,
இளைஞனை கனவு காண செய்தாய்
குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தாய்
ஒளி இழந்த கண்களோடு,
எங்கு காண, கனவை...?

அதோ,
இந்திய தாயும்
தமிழ் தாயும்
இயற்பியல் தாயும்
ஒரு சேர அழுகிறார்கள்
எங்களோடு . . .

இந்த ஆண்டில் என்னை உலுக்கிய மூன்றாவது மரணம் :: வலிமை இன்றி வெறுமையாய் என் பேனா . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக