செவ்வாய், 2 நவம்பர், 2010

காக்க காக்க.

ஒவ்வொரு முறையும்
சொல்வதை செய்திருந்து,
காரணங்கள் பல
சூழல்கள் சில,
என பழிபோட்டு
கதை சொல்ல,
கோபம் தான் குடிகொள்ளும்,
உன்மீது எனக்கு..!
ஒரு முறை..,
ஒரே ஒரு முறை,
உன்னை காக்க வைத்து,
நான் தவித்த தவிப்போ...!
காத்திருப்பதற்கும் மேலாய்,
காக்க வைப்பத்தும்
தவிப்பாய் தான் உள்ளது - இருபுறமும்
உண்மை நேசம் இருந்தால்..!

2 கருத்துகள்: