வியாழன், 25 நவம்பர், 2010

ஊடலாய் ஓர் உரையாடல்...

பூவுக்கு பூ தாவும்
வெட்டுக்கிளி.
இதன் தாகத்தை தீர்ப்பது
எந்த பனித்துளி?

பனித்துளியாக முயற்சிக்காதே.
பேதை பெண்ணே.
உனக்கு கொடுப்பினை இல்லை 
என் தாகத்தை தீர்க்க.

வாழ்வு முழுதும்
வெட்டுகிளியாய் உருகொள்வாயோ?
உன்னை பஞ்சவர்ண கிளியாக
பசுமை கொஞ்சும் மரமாவேன்...

வேரறுந்து நிற்பாய்
வேண்டா வேலை செய்தால்.
சருகாகாதே  .!

நேசித்த காரணத்தால்
நெஞ்சோடு குடி இருக்க
என்ன தவம் செய்வது ..?

ஒரு தலை நேசம் 
வேண்டாம் இந்த வேஷம்!
புண்பட்ட நெஞ்சுக்கு
புடம் போட்டால் - பாசம்! 
காதல் அல்லவே.!

காதலால் தான்
சிறகொடிந்த உனக்கு
மரமாகி நிழல் தந்தேன்,
இதமாய் நீவி விட்டேன்...!

புரிதலின் பரிச்சயம் 
இல்லையா உனக்கு? 
தேன் சுவைத்திருக்கும் என்னிடம் 
மற்றொரு மலராய் வருகிறாயே?

மனதில் இல்லையேல்
ஏன் சுவைத்தாய் என்னை.?

மலர் வாடிவிடகூடதென
மகரந்த சேர்க்கைக்கு தான்..!

மகரந்த சேர்கையால்
கனிந்த என் நிலை.?

காற்று காதலன் வருவான் 
கனியே, உன்னை கண்டெடுக்க.!

கணவனாய் உன்னை
காதலித்த என் நிலை.?

அறிந்த முட்டாளாய்
 நீ செய்த பிழை.
நான் என்ன செய்ய.??

உன் மீதான என் நேசம்.?
எது வரை என் சுவாசம்.?
ஏனடா இந்த வேஷம்.?

உன்னை கொண்டாட 
உன்னவன் வருவான்;
உலகின் உயர்வை
நீ அடைவாய்.!

வியர்வை சிந்தி
சகித்திருக்கும் உன் நிலை.?

கடைசி வரை,
சகிப்புடனே சுகித்திருப்பேன்..

கடைசி வரை
மலரை சூடாது
மல்லார்ந்து பார்திருபாயோ ?

இல்லை..
அண்ணார்ந்து பார்த்திருப்பேன்.


நந்தவனத்தில்
நீ குடியேற மாட்டாயா.?


பிருந்தாவனமே
பாலைவனமான கதை நீ அறிவாய்..

பாலையிலும் பசுமை பிறக்கும்
நீ உன்னை மாற்றிகொண்டால்..!

கற்றுகொடுத்ததை 
உன் உள்ளம் மறக்கவில்லை !
அறிவேன் என்றும் நான்.!
தேவை இல்லை நிருபணம்.!

நிருபிக்க கணக்கு பதிவியல்
கல்வி இல்லை இது.!

வாழ்கையும் 
ஒரு கணக்கு தான்.!

முடிவாய்..?

முற்று புள்ளி வைக்க 
மனமில்லை...

உன் இனத்திற்கும்
மனம் உண்டோ என்ன.?

மனதால் மடிந்த என்னை
சொல்லால் சுடாதே.

மலருக்கு தேன் சுவை தெரியும்.
சுடத் தெரியாது.!

மன்னிப்பாயோ.??

மன்னிப்பதற்கான
என் உரிமை.??

சிதைத்து 
உன்னை தான்.!

நான் சிதையவில்லையே.!

பொய்.
 பொய் புகட்டதே..

நீ கூறியதை விடவா .?

என் செய்தேன் நான்..?

உன் மனம் அறியும்.!

என்னுள் புதைந்தவை பல.
நீ குறிப்பிடுவது..?

புகட்டிய பொய்களின்
யோசனை உதவும்...

மறக்க மாட்டாயா.?

உன்னையா.?

இல்லையில்லை. 
என் தவறுகள் என
 நீ கருதுவதனைத்தையும்..

பயனில்லை..
மறித்து விட்டேன்..!

வேண்டாம் என் மலரே.!
காலம் உண்டு உனக்கு வாழ.!

அட..
சாத்தானும் வேதம் ஓதும்
அது  இது தான் போலும்.

முடிவில்லையா இதற்க்கு.?
வழி இல்லையா உன்னை தேற்ற.?

நீங்கி செல்வது உன் பழக்கம்
நீர் சிந்துவது என் வழக்கம்..!

சிறகொடிந்த என்னை
 சிந்தையுள் வைக்காதே.!

இலையுதிர் காலம்
எனக்கல்லவோ.?

நிழல் தரும் என் நிஜமே..
ஏன்...??

வசந்த காலம் வந்துவிடும்
அந்தோ.!
புது மலரும் பூக்கிறது.!

வேண்டியதில்லை 
வேறு மலர்..

உதிர்ந்து விடுகிறேன்
மறந்து விடு.!

சருகாகினும் உன்னை
கருக விட மாட்டேன்.!

கண்ணில் இருந்து மறைந்தால்
கருத்திலும் விலகிவிடுவேன்...

கல்லறை சென்றாலும் 
கருவறை மறப்பதில்லை..

கருவறை இல்ல
வெறும் ஓய்வறை தான்..

என்னை இளைப்பாற்றி 
தாலாட்டும் சுகவறை நீ...

ஓய்வறைகளுக்கு
ஒப்பனை தேவை இல்லை..

ஒப்பனை இல்லாமலும்
என் குழந்தாய்,,
நீ அழகு தான்.!


அழிகிறேன்.
அழாதே..!

வேண்டாம் விபரீதம்.

புது மலர் மலர்ந்தார்பின்,
இனி எனக்கென்ன வேலை.?

விலகாதே.வருத்தாதே.!
மலராது இனி ஓர் மலர்...

வருந்தாதே..
வாழப்பார்..!

நீ இன்றியா.?

காலம் கவலை அகற்றும்.!

காலம் சென்றாலும் 
காலமாகாது  காதல்...

காதல் இல்லை என்றாய்..

இனி கனவிலும் 
உன்னை விலக மாட்டேன்..

உன்னை கடந்த கனவு நான்..
களவு போனது என் குற்றம்..

களவாண்டது 
என் குற்றமே..

தூண்டியது நானே..

தீண்டியது நான் தானே..

தாகம் தனித்தேன்..

தேகம் எரிதேனே...

வேண்டாம்..
மீண்டும் என்னால் முடியாது.!

காத்திருப்பேன் 
காலம் கனியும் வரை.

எதிகாலம் நிதர்சமானது...

நம்பிக்கை வைப்போமே...

நடக்க இயலாத ஒன்றில் நம்பிக்கையா?

இயலாதது 
ஒன்னும் இல்லை இவ்வுலகில் ..

மூடர் சொல்..
மலையை நகர்த்த இயலாது.!

மனதை மாற்ற இயலுமே..

மனதில்லை என் இடத்தில..

எனிடத்தில் தொலைந்த அதை 
மீட்டெடுக்க மாட்டேன்..

எடுக்க அவசியம் இல்லை.
அடக்கம் செய்தேன்..

இனி பேச்சிற்கு இடம் இல்லை..

பேசி பயனில்லை..

உன் காயங்களை ஆற்றுவேன்..

காயங்கள் எனக்கில்லை...

விலகாதே...

வீழ்ந்து விட்டேன்
விட்டு விடு.........!!



.

5 கருத்துகள்:

  1. kaadal thoviyai kooda azhagai varniththirukkireergal...

    பதிலளிநீக்கு
  2. lines are very touching.
    good post...

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் மிகவும் அருமை சற்று சிறிது சிறிதாக பதிவு செய்து இருக்கலாம் ஒரே மூச்சில் கடல் முழுவதையும் குடித்து முடித்த ஒரு உணர்வு . அருமை வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. Nice lines GaanZ. great imagination. Keep Going.
    Saakshi, Chennai.

    பதிலளிநீக்கு