நீ ரசிக்க மாட்டாய் என தெரிந்தும்
உனக்கு பிடித்த ஆடைகளை
தின தேர்தெடுக்கும் கரங்கள்,
நீ அழைக்க மாட்டாய் என தெரிந்தும்
அலை பேசியை எப்போதும்
ஆவலாய் பார்க்கும் கண்கள்,
நீ பேசமாட்டாய் என தெரிந்தும்
உன் வார்த்தைகள் மட்டுமே
கேட்க தவஞ்செய்யும் காது மடல்கள்,
நீ மட்டுமே என்னுள் என
உறுதி செய்யும் என் உடல் திசுக்கள்,
உன்னை மட்டுமே சுவாசிக்கும்
என் நாசியின் துளைகள்.,
உன்னை மட்டுமே காண
துடிக்கும் என் கரு விழிகள்,
நீ இருக்கும் இடத்திற்கு மட்டும்
வலிக்காது பயணிக்கும் என் கால்கள்,
இப்படி,
இப்படி என் அனைத்துக்கும்
எப்படி புரியவைக்கும்
என் மதியும் மனதும்,
உன் மனதில் நான் இல்லை என.?
excellent priya. great
பதிலளிநீக்கு