வியாழன், 5 டிசம்பர், 2013

என்னவென்று நான் சொல்ல. . .

கனத்த மனதுடன் இருந்த ஹ்ருதயம்
உந்தன் வார்த்தைகளில் சமணபட்டு போனதை
என்னவென்று நான் சொல்ல. . .

காதலாகி கசிந்துருகி கடைசியில்
வென்ற அன்பின் கதை - இதை
என்னவென்று நான் சொல்ல . . .

களைப்படைந்த கால்களோடு இருந்தும்
கருவிழி உந்தன் கதை தேடுவதை 
என்னவென்று நான் சொல்ல . . .

உந்தன் கதைகளை படிக்கையிலே,
மனதில் பரவும் இதத்தை,
என்னவென்று நான் சொல்ல . .

காவியமாய் நீங்கள் வடித்தபோழுதும்,
கதை என்று சாதாரணமாய் சொல்லும் என்னையே,
என்னவென்று நான் சொல்ல . . ?

எழுத்தரசியின் இளைய மக்களாய்,
மாலினியும் பிரபாவும் ஜனித்தை
கதையென்றா நான் சொல்ல ? ? ?
 — feeling wonderful with Muthulakshmi Raghavan.

எழுத்தரசி முத்துலட்சுமி ராகவன் அவர்களின் என்னவென்று நான் சொல்ல நாவல் படித்த பின்பு அவர்களுக்காக எழுதியது . . . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக