வியாழன், 27 அக்டோபர், 2016

காவியங்கள் கருத்தரிக்கிறது . !

குழப்பங்களின் ஊடே,
அவன் நேசிக்க தொடங்கினான்.
துர்கதிகள் கண்ட அவளின் ஆன்மா,
நிதானிக்க தொடங்கியது.
நேசங் கொண்டு அவன் 
அவளை நீவ,
அங்கு இறக்கைகள் முளைக்க தொடங்கின.
இருட்டில் இருந்து
நிழலாய் மாற தொடங்கிய அவள்,
வெளிச்ச பரப்பில் தேவதையானாள்.
தினம் பருகும் காபி கோப்பையின் கீழே,
தன் ஒவ்வொரு இறகுகளை 
தூது விட்டு காத்திருந்தாள்.
அங்கோர் அழகிய பந்தம்.
அவன் மனதில் 
இவள் நினைவுகள் தேங்கி நிற்க,
இவள் மதியில் 
அவன் தாக்கங்கள் கவிதையாய் கொப்பளிக்க,
அழகான காவியங்கள்,
நிறைவாய் கருத்தரிக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக