திங்கள், 3 அக்டோபர், 2016

வரங்களே சாபங்களானால்

உடலால் மறைந்தாலும்
என் உயிரினுள் உறைந்திரு .
உன் உணர்வினை
தெளித்து வரைந்த
கவிதையினுள் பதுங்கிக்கொள் .
இனி,
சகோதரனை பற்றி
மட்டுமே எழுத
வரம் பெற்றுயிருக்கிறது
என் பேனா,
சபிக்கப்பட்ட
என் கைகளில் இருந்து .
நீ என் வரம்,
நான் உன் சாபம் . . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக