செவ்வாய், 5 ஜூலை, 2011

கேட்குமா வேண்டியவர்களுக்கு?

தனிமையில் கதறிடும் நேரம்
கண்கள் கரைத்திடும் பாரம்.
உறவுக்கென ஏங்கி 
கசிந்தாலும்,
உள்ளம் உறைப்பதில்லை 
உண்மையை!
சுகமென நினைவுகள் 
மனதில் கமழ,
கனவுகள் தான் வைக்கின்றன 
என்னை அழ.!
ஆதலால்
உறக்கத்திலும் சந்திக்க வழி இல்லை!
உருக்கமாய் சிந்திக்கிறேன்,
உண்மையை நிந்திக்கிறேன்.
உங்களுடன் இருக்க வேண்டிக்கிறேன்..!


2 கருத்துகள்: