காலம் காலமாய்,
கவிதைகளுக்கு மட்டுமே
கருவாகிறாள்
முதிர் கன்னி அவள்.!
காலங்கள் கரைந்தோடினாலும்,
கனியும் வரை காத்திருந்தும்,
மணமேடைதனை
மனமேடையிடவும்,
யோசிக்கின்றன,
பல முதிர்காளைகள்
உழுக ஓர் நிலம் தேடி.!
இவர் விழி சிந்தும் செந்நீரை
வழியன்றி செய்ய
வருபவர் எவரோ??
Nice ..
பதிலளிநீக்குthanks prabhu..!
பதிலளிநீக்கு