வெள்ளி, 13 ஜூலை, 2012

தொடரட்டும் அவர்களோடு . . .

உறவுகளுக்காக ஏங்கினாலும்
என் கண்களில் கண்ணீர்  தங்கினாலும்
இதயம் பல வலிகளை  தாங்கினாலும்
வெளி காட்ட வழி இல்லை,
சாய்ந்து கொள்ள தோள்  இல்லை !
கனா காணாத கண்களும் இல்லை,
கனவிற்கு வேண்டி,
உறக்கம் தொலைக்கவும் மனம் இல்லை !
இன்பமான நினைவுகளை, கண்கள் காண,
உறக்கத்தை தேடுகிறேன்,
என் விழிகளே,
வலி ஏதும் இன்றி உறங்கிடுங்கள் !
எனக்கு பிரியமானவர்களுடன்
தொடரட்டும் என் பயணம் . . . .!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக