வாழ ,கிடைத்த பயன் ,
நான் அல்ல நாம் வாழ,
என்று உணர்த்துபவர் நீர்!
நீரும் சிரித்து,
எம்மையும் சிரிக்க வைக்கும்
வித்தாக கலைஞர் நீர் !
சீரியதாய், வீரியமாய்,
பற்பல கற்பனைக்கு
வித்தாகும் வித்துவான் நீர் !
வருடங்கள் வந்து போனதில்,
இழுக்கில்லாத செயல்கள்
மட்டுமே செய்யும் கனவான் நீர் !
அன்பும் பண்பும் கலந்த
அழகும் அடக்கமும் பொங்கும்,
கலை வள்ளல் நீர் !
உள்ளங்கள் உடையாதிருக்க,
உந்தன் நேரங்களை எமக்களிக்கும்
உன்னத உத்தமர் நீர்!
உச்சிதனில் இருப்பினும்,
மனித நேயத்தை
மறவா மனிதர் நீர்!
உதடுகளில் புன்னகை உறைய,
உள்ளத்தினில் அமைதி நிறைய,
உம்மை தேடி இன்பங்கள் விறைய,
உமது சோகங்கள் அதில் மறைய ,
வேண்டிகிறோம் இறையவனை ! !
வாழ்த்த வயதில்லை,
வணங்குகிறேன்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு . . . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக