காதலனாய் இருந்து
பதவி இறக்கம் பெற்ற
கணவன் மார்கள் ஏராளம்!
நீயும் நானும் நாம் ஆகும் பொழுது,
புல்வெளியிலும் பனித்துளி பிறக்கும்
என்றார்கள் அவர்கள் ,
கண்களிலும் கண்ணீர் துளியும் வற்றாது
என்பேன் நான்!
நாம் என்ற பின்பு
உதடுகளும் மட்டுமே ஒட்டியது !
மனம் திக்குகள் எட்டில்
தனிமையை எட்டியது !
வீட்டில் விட்டு சென்ற சண்டையை தொடரவே
இன்றளவும் தேடுகின்றனர் தம்பதியர்
தம் அலைபேசிகளை!
பூங்காவில் விட்டுசென்ற மௌனத்தை
தொடர நினைத்த காலம் மறந்தனவாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக