ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நீ என்பதும் நான் என்பதும் . . .

காதலனாய் இருந்து 
பதவி இறக்கம் பெற்ற 
கணவன் மார்கள் ஏராளம்!
நீயும் நானும் நாம் ஆகும் பொழுது, 
புல்வெளியிலும் பனித்துளி பிறக்கும் 
என்றார்கள் அவர்கள் ,
கண்களிலும் கண்ணீர் துளியும் வற்றாது 
என்பேன் நான்!
நாம் என்ற பின்பு 
உதடுகளும் மட்டுமே ஒட்டியது !
மனம் திக்குகள் எட்டில் 
தனிமையை எட்டியது !
வீட்டில் விட்டு சென்ற சண்டையை தொடரவே 
இன்றளவும் தேடுகின்றனர் தம்பதியர்
தம் அலைபேசிகளை!
பூங்காவில் விட்டுசென்ற மௌனத்தை 
தொடர நினைத்த காலம் மறந்தனவாய்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக