புதன், 1 டிசம்பர், 2010

தேவதை வாழும் உள்ளம்...

மகரந்த மழையில் 
தேவியிடம் மோனத்தில் 
சுகித்த தருணம் அதில் 
தேன் உண்ட வண்டாய் 
கிறங்கி அனுபவிக்கயிலே., 
பூமிக்கும் ஓர் தேவதை வேண்டும் என 
யோசித்த கடவுள், 
டிசம்பர் தேவதையாய், 
முதல் நாளிலே 
உன்னை பூமிக்கு அனுப்பி விட்டானோ..? 

வருடத்தில் 
ஒரு முறை வரும் 
இந்நாளுக்காக 
வருடம் முழுதும் 
காத்திருக்கிறேன் 
ஏனெனில், 
இன்று தேவதைகள் 
கொண்டாடும் தினம்... 


பிறந்த நாள் காணும் தோழி சோபியாவிற்கு...

1 கருத்து: