வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

என் உயிருக்குள் நீ!





பல சமயங்களில்

என் மனதில் அடிவாரத்தில்
ஓங்கி அடிக்கும்
உன் நினைவலைகளின்
சில சாரல்களாய்..,
ஓரீரு வரிகள்.!

உன் மழையின்
சாரலில் சிலிர்த்து எழ,
உயிரும் உடையும் சப்தம் 
பலமாய் என்னுள்...!

என் உயிர் தூறல்
சிறிதேனும்
ஈரப்டுத்டுமா
உன் இதயத்தை....
அல்லையேல்
குடை விரித்து பிடி..!
கரை படபோகிறது,
உன் கல்நெஞ்சம்..!

துலைந்த இடம்  ஒன்றாய்,
தேடும் இடம் மற்றொன்றாய்,
மதிகெட்டு தான் திரிகிறேன்,
தீரா அன்பினால்.!


உன்னால் உடைந்த திசுக்கள்
ஒட்ட  தான் இல்லை என்னுள்;
அதில் ஒன்றாய்,
என் சிறு இதயம்!
வெறும் செநீரை மட்டுமே சுமக்காமல்,
உன்னையும் கருவாக்கி தாங்கிட,
ஆசை பட்ட பாவத்திற்கு,
உடைந்தே கிடக்கிறது,
ஆறா ரணமாய்!!
அதனால் தான்
துடி துடித்தே,
ஏங்குகிறதோ??

காயங்களால் மட்டுமே தீண்டி,
நரம்புகளையும் தூண்டி,
சுடும் தீயிற்கு இரையாக்கி விட்டாயோ,
கடைசியில் என்னை??

நெஞ்சம் சரிகிறது,
கண்ணீரும் எரிகிறது!
உரிமை போர் கோடி
தூக்கிட தயார் இல்லை நான்.!
அறிந்தேன் உன் மீதான
என் உரிமையை.!
வார்த்தைகளில் ஒருவாராய்,
செய்கையில் மற்றோருவாராய்,
உணர்த்தியே விட்டாய;
வழியை விலையை எடுத்து.!

பாராமுகமான உன் மொழியை விட
இழந்த வலி பெரிதல்ல!
ஆசைகள் எதிர்பார்புகளாக,
எதிர்பார்ப்புகள் ஏக்கங்களாக,
ஏக்கங்கள் ஏம்மாற்றதை தழுவ,
ஏம்மாற்றங்கள் உன் எதிர்ப்பை பறை சாற்ற,
எதுவுமே நிலையானதில்லையோ.,
உன்னை போலவே??

விழி உடைத்து
வழி கண்டு
உணர்வுகளை தாக்கி,
இன்று,
என் உயிருக்குள் நீ!

மௌனங்களில்
உன்னை எழுதி
வார்த்தைகளில்
உன்னை வரைய..,
உன்னுள் நான் கலந்தேன்.!
இல்லை இல்லை,
என்னுள் நீ தான்,
இன்றும், என்றும்!
உருகி
மருகி
மருவ நேசம் கொள்ள - என்
உயிர் உறங்கிய பின்பாவது
உணர்வாயா,
பெயர் இல்லா 
என் பந்தத்தை.....????
அதன் நேசத்தை...???









1 கருத்து:

  1. அழகான வரிகள் ... பகிர்ந்தமைக்கு மிக நன்றி. பனி துளி சங்கர் கூறியார் போல் கொஞ்சம் கொஞ்சமாய் பகிர்ந்து இருக்கலாம்... ஒரே மூச்சில்.....! முக்குளித்தேன்!

    பதிலளிநீக்கு