புதன், 4 செப்டம்பர், 2013

உங்கள் ஆசிகளுக்காக ஆசைகளோடு . . !

சிலையும் சிதையாமல்,
கல்லும் அதிராமல்,
பளிங்காய் செதுக்கினீர் . !

ஆயிரமாயிரம் மக்கள்,
ஒன்றான நோக்கமாய்,
என் மாணாக்கர் இவர் .  !

தண்டனை எமக்கு,
வேதனை உமக்கு,
தாயுள்ளம் கொண்டனர் நீர் . . !

 நாங்கள் மின்ன,
வெண்முத்துக்களாய்,
முத்துகுளித்தீர் நீர் . . !

காய் தொங்கும் கொடியாய்
சேய்  தாங்கும் தாயாய்,
தயாள உள்ளம் கொண்டவர் நீர். . !

உமது உழைப்பின் முடியலில்,
வியர்வை குளியலில்,
மனிதர்களாய் நாங்கள் . . !

எமது வெற்றிப்பாதையில்,
உமது கை சுவடுகளே ஏராளம்,
எனது பாதங்களை பாதுகாத்ததால் . . !

இறை பணியில் இனிதாய் தம்மை அற்பணித்த அனைத்து ஆசிரிய நல்லுள்ளங்களுக்கு எனதினிய ஆசிரியர்தின வாழ்த்துகள் ! ! !

உங்கள் ஆசிகளுக்காக,
ஆசைகளோடு,




2 கருத்துகள்: