நாளை நம் கையில் !
கூவியபடியே திரண்ட
தமிழ் தாயின் தவசீலர்களுக்கு
என் தலையாய வணக்கங்கள்!
தலை பிரசவம்
என் தாய்க்கு
ஒவ்வொரு முறையும்,
என தாயின் வலி - தமிழ்
தாயின் வலி உணர்ந்த
தன்மான சிங்கங்களுக்கு,
என் தலை தாழ்த்தி
வணக்கங்கள்!
பட்டினி போராட்டம்
போர் தொடுக்கும்
தமிழ்நாட்டு சிங்கங்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்!
காளைகளுக்காக
களம் இறங்கிய
எங்குல சிங்கங்களுக்கு
கை கூப்பிய வணக்கங்கள் !
இனிக்க இனிக்க பொங்கலிட்டு
இல்லங்களில் இட்ட பொங்கலை
நம் உணர்வுகளோடு பங்கிட்டு
குடும்பத்துள் ஒருத்தனாய்
கருதும் காளைகளுக்காக
கூட்டமாய் கூடியிருக்கும்
வீரர்களுக்கு..!
பாஞ்சு வரும் காளைகளை,
நெஞ்சில் தாங்கி
கடலோரமாய் குவிந்த
கன்றுகளை
கயவர்கள் கூட்டம்
கொடுந்திறையிட்டு
அடக்க தொடங்கும் தருணத்தில் ,
வாழ்த்துப்பாக்களுக்கு
இடமில்லையென்றாலும்
எச்சரிக்கைப்பாக்கள் தொடுக்கிறோம் ,
காண்பிக்காதீர்கள் வீரத்தை,
கட்டுக்கடங்காது நிற்கும்
எங்குல கன்றும் காளைகளும்
அறப்போர் நிறுத்தி ,
தீஜ்வாலை உமிழ்வார்கள் . . !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக