புதன், 18 ஜனவரி, 2017

தடை அதை உடை

நாளை நம் கையில் !
கூவியபடியே திரண்ட
தமிழ் தாயின் தவசீலர்களுக்கு
என் தலையாய வணக்கங்கள்!

தலை பிரசவம்
என் தாய்க்கு
ஒவ்வொரு முறையும்,
என தாயின் வலி - தமிழ்
தாயின் வலி உணர்ந்த
தன்மான சிங்கங்களுக்கு,
என் தலை தாழ்த்தி
வணக்கங்கள்!

பட்டினி போராட்டம்
போர் தொடுக்கும்
தமிழ்நாட்டு சிங்கங்களுக்கு,
என் பணிவான வணக்கங்கள்!

காளைகளுக்காக 
களம் இறங்கிய 
எங்குல சிங்கங்களுக்கு 
கை கூப்பிய வணக்கங்கள் !

இனிக்க இனிக்க பொங்கலிட்டு 
இல்லங்களில் இட்ட பொங்கலை 
நம் உணர்வுகளோடு பங்கிட்டு 
குடும்பத்துள் ஒருத்தனாய் 
கருதும் காளைகளுக்காக 
கூட்டமாய் கூடியிருக்கும் 
வீரர்களுக்கு..!

பாஞ்சு வரும் காளைகளை,
நெஞ்சில் தாங்கி 
கடலோரமாய் குவிந்த 
கன்றுகளை 
கயவர்கள் கூட்டம் 
கொடுந்திறையிட்டு 
அடக்க தொடங்கும் தருணத்தில் ,
வாழ்த்துப்பாக்களுக்கு 
இடமில்லையென்றாலும் 

எச்சரிக்கைப்பாக்கள் தொடுக்கிறோம்  ,
காண்பிக்காதீர்கள்  வீரத்தை,
கட்டுக்கடங்காது நிற்கும் 
எங்குல கன்றும்  காளைகளும் 
அறப்போர் நிறுத்தி ,
தீஜ்வாலை உமிழ்வார்கள் . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக