புதன், 27 அக்டோபர், 2010

உதயத்திற்கு உதவுவோம்...


உயிருடன் இருந்தும்
 உறங்குகின்றனர்
சவ குழிகளில்...!
கொடை வள்ளல்லம்
பரத பூமி..
குண்டு மழைக்கு - வெடி
குண்டு மழைக்கு 
குடை கொடுக்க வக்கில்லை...!
உலக வரைபடத்தின்
பெளத்த நாடு - இன்றோ
யுத்த நாடாய்...!
அலைகளின் ஓசையை விட
அலறலின் ஓசையே 
அதீதமாய்..!
செவிடாய் கிடக்கும் 
உலக நாடுகளும்,
ஐக்கிய நாட்டுசபையும்...!
மடல் சாய்க்க
மனம் இல்லையா?
மனிதாபி"மானமே" இல்லையா?

4 கருத்துகள்: