செவ்வாய், 29 ஜனவரி, 2013

நீந்தி செல்கிறாயோ ? ? ?

உதிர்ந்த இலைகளின் இடைவெளியில்
நிழலாகிறது உந்தன் நினைவுகள் !
பூமியை ஒட்டிநிற்கும் கால்களும்
செயலிழந்தன,
நீ ஓய்ந்த செய்தியினை கேட்டு !
தோற்று போன பின்பு தான்
புரிகிறது பிழைகளின் ஆழம் !
கடலினில் கரைந்து
மண் துகள்களில் அமர்கிறது
உந்தன் ஞாபகங்கள்!
என்றோ கட்டுபடுத்திய பாசம் இன்று
காலத்திலும் ஞானபெரிதாய் !
வேறு வழியில்லை,
ஏக்கம் கலந்த வெப்ப மூச்சை
உனக்கு துணை அனுப்பி,
கண்ணீரில் கரைகிறோம் நாங்கள் . . .!
நீந்தி செல்கிறாயோ ? ? ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக