வியாழன், 17 ஜனவரி, 2013

என் பொங்கல் !

கள்ளி காட்டு மூலையிலே
கலைநய கோவில் ஒன்றும்,
பள்ளி தந்த கல்வியை போல்,
சொற்கள் கொண்டு,
கோமாதா பாலினை இட்டு,
காவியங்கள் பல கொண்டு,
கணக்காய் பாகெடுத்து ,
நெய்தல் நில பூமகளின்,
நெய் சேர்த்து,
பாலைவன பகலவனின்
தீ சுடர் இட்டு,
வாழ்கை நெறியாம் வள்ளுவத்தை,
வாழை இலையில் இட,
கூடிய மக்கள் அனைவரும்,
பண்ணிசைத்து நின்றிருக்க ,
எந்தன் தமிழ் அன்னையே ,
கவி பொங்கள் நாம் இட்டோம்,
சுவைக்க ஓடி வாரும் அம்மா !





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக