வெள்ளி, 18 ஜனவரி, 2013

வெண்மைக்கு ஓர் இரங்கட்பா . . .


எந்த மனிதன் மீது 
நம் நம்பிக்கை வித்தாகிறதோ 
அவர் கடவுளாம் . . .
ஆதலினால் அம்மனிதர்கள் கடவுளாகின்றனரோ 
வெகு விரைவில் ? ? 

தலைமகன்  என்று
அறிந்தனவே யாம் உம்மை,
தலை வணங்கி 
போற்றினார் பலர் !
தேனியாய் உழைத்த நீ,
என்றும் உலகம் உணரும் மானீ  !

மண்ணுலகம் வாழ்த்திடவே, 
இவ்விடத்தி உன் புகழ் இருத்தி,
மண்ணில் நீ உமதுடல் நீங்கி ,
விண்ணுலகம் சென்றாயோ,
மேலுலகிளிருந்து எம்மை காண?
மக்கள் கூட்டம் திரள,
மேட்டுபாலயமே, 
தனது மருத்துவ தலைவனின்,
தனதுயிர் காத்த தவ புதல்வனின் 
பளிங்கு முகம் இறுதியாய் காண,
இல்லத்தில் சூழ்ந்ததோ?
உன்னால் காக்கப்பட்ட 
உயிர்கள் அனைத்தும்
கண்விழித்து நோக்கையிலே,
ஹையோ ,
நீ கண்மூடி உறங்குவதேனோ ?

விழித்தெழுந்து செவி சாய்பாயோ ,
பெருங்குரலெடுத்து கதறும் மக்களுக்கு?
வெண்ணிற  மேல் அங்கி இட்ட 
உமது கம்பீர தோற்றம் ,
அதோ, வெண்ணிற துணியால் 
மூடப்பட்ட சடலமாய் . . .
அகன்ற விழிதனில் அனைவரையும் கண்டாயாம் ,
விழி வழி கூறிய செய்திதனை 
மொழி பெயர்துணர முயல்கிறோம் நாங்கள்,
நிரந்தர பிரிவை தான் பறை சாற்றினாயோ?
கண்ணீரால் கழுவுகிறோம் நாங்கள்,
அய்யனே உன் பெயரேன்றேன்றும் 
வாழ்ந்திடவே இவ்வையகத்தில் . . .

கவிதாஞ்சலி - மண்ணுலகில் இன்னுயிர் நீத்து விண்ணுலகில் வாழ்ந்திட சென்றிருக்கும் என் தாய் மாமா Dr .N .S .Harihara Iyer அவர்களுக்கு 

6 கருத்துகள்: