செவ்வாய், 26 ஜூலை, 2016

பெயரில்லா பறவை . .

மரத்து போன தழும்பொன்றை
வெண் சிறகினுள் தாங்கியே,
பறவையாக முயற்சிக்கிறேன்,
இருட்கூண்டு ஒன்றினுள் இருந்தே . . !

விற்க பட்ட குஞ்சுகளுக்கு
மத்தியிலே பெயரில்லா பறவையாய்
புதரினுள் சிக்கி,
வலசை போய் தோற்று . .

பெயரில்லா பறவையாய் ,
என் குடில்  தேடி ,
இருட்டினுள் இடறி ,
இருட்கூண்டில் சவமாகி . . .

பின்பு
மரத்து போன தழும்பொன்றை
வெண் சிறகினுள் தாங்கியே,
பறவையாக முயற்சிக்கிறேன்,
இருட்கூண்டு ஒன்றினுள் இருந்தே . . !

தீ தந்த காயத்திற்கு,
என் சிறகை கொண்டு களிம்பு,
இங்கு நான் கொண்ட காயத்திற்கு,
ஏதாவது கிடப்பிலுண்டோ கொலைக்கருவிகலின்றி ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக