செவ்வாய், 26 ஜூலை, 2016

நீண்டதொரு சங்கதி . . .

காய்ந்து போன காயத்தின்
தழும்பொன்றிலிருந்து ஒழுகும்
செந்நீர் சகதியாய் ,
நீண்ட நாட்கள் பிறகு,
எடுக்க பட்ட என் எழுத்தாணியின்
நீண்டதொரு சங்கதி . . .
அவ்வப்போது கனாக்குள்
வந்தென்னை வீழ்த்திச்சென்ற
வெண்ணிலாவின் மென் அன்பிற்காய்
பத படுத்திய பேனாவின்
நீண்டதொரு சங்கதி . . .
பாரினில் கண்ட சொந்தமனைத்தும்
ஏய்த்தேய்த்து என்னை வீழ்த்த ,
என் கைப்புகுந்த கள்வனின்
நீண்டதொரு சங்கதி . . .
" கையளவு நிற்கும் கைபேசி வந்ததினால்,
நான் உன் கைமீறி போனதென்னோ ?
உன் கையினுள் நின்ற என்
கண்ணீரில் காயமாற்றிக்கொண்டாய்,
பின்பேன் கையை விடுவித்து
என்னை விட்டாய் . . ? ? ? "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக