செவ்வாய், 26 ஜூலை, 2016

வற்றாத ஜீவநதி . . . !

தனிமையின் தூவலில்
பற்பல பிதற்றல்கள் . . !
நீர் இல்லா நதி கரை
மணல் சூடாய் நான் . . !
நதி வற்ற மணல் அள்ளும்
அரக்கர்களுக்கு புரியாத
மணலின் குமுறல்களாய்
என் பிதற்றல்கள் . . !
நிரப்ப படாத தருணங்களிலும்
தாய்மையுணர்வோடு தேடிவந்து
நதி மடி அமரும் மனிதர்கள் போல்,
எனக்கமைந்த நண்பர்கள் . . !
எங்கள் வாழ்க்கையை மீண்டுமொரு
பிரதியெடுத்து அலசி கொள்கிறோம் . . ,
வாத்சல்யங்கள் வாழ்க்கையானால் ,
வற்றாத ஜீவநதி தான் . . ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக