வெள்ளி, 16 செப்டம்பர், 2016

பௌர்ணமிகவிதைகள்.

உன்னை நோக்கி தவழ்ந்து வருகையில்
உடைந்த என் முழன் காலின் வலியை
தவிர வேறில்லை தர
என்றே நினைத்தேன்.
வெண்கிரணங்கொண்டு என் வெறுமை அள்ளிக்கொண்டு, 
நீ முடிச்சிட்டாய் முத்தாய்ப்பாய்.
நானே எழுத வேண்டும்.
உன் பிரகாசங்கொண்டு
அத்துனையும்
பிரகாசமாய்
நானே எழுத வேண்டும்.
ஏனெனில்,
நீ என் பௌர்ணமி...
#பௌர்ணமிகவிதைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக