வெள்ளி, 23 செப்டம்பர், 2016

பௌர்ணமி கவிதைகள்

காரிருள் விண்ணில் ,
தொலை தூர தொடுவானில்,
மிளிர்கிறாய்,
ஒளிர்கிறாய் . !
என்றேனும் ஓர் நாளெனிலும் ,
என் மௌன உலகில் ,
ஒளிர்வூட்டி
குளிர்விக்கிறாய் . . !
சிலுசிலுப்பேற்றி ,
கூறாமல் கூறுகிறாய் ,
தொலைவாய் நிலவாய்
இருந்தும் அணைப்பாய் என . . !
நீ என் பிள்ளை நிலா . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக