விரலுக்கு பேனா பிடிக்கும்
வித்தை கற்பித்தீர் ,
விழிக்கு வார்த்தை படிக்க
பாடம் எடுத்தீர் ,
ஆராய்ந்து அறிவினை வளர்க்க
அறம் கூட்டி கற்பித்தீர் ,
அன்போடு பண்பையும் பிணைந்து
ஆழ் அறிவினை புகட்டினீர் .
வளமான வாழ்க்கை பாதையை
வாஞ்சையோடு காண்பித்தீர் ,
அறப்பணியாம் ஆசிரிய பணி
அதற்கென தங்களை அர்ப்பணித்தீர் !
உங்களால் வளர்ந்தோம்,
உங்களுடன் வளர்ந்தோம்,
உங்களுக்காய் இன்றொரு வாழ்த்து ,
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக