செவ்வாய், 18 ஜூன், 2013

விடியலுக்காக வாடுகிறேன்

அமைதியான என்னுள்
ஆர்பரிக்கும் அதிர்வுகள்
அணுக்கள் அசையும்
அதிசியங்கள் !

கலவரமாய் வந்ததே 
உன் வார்த்தைகள்,
கவலையும் தந்ததே ,
பூகம்பத்தை போலே!

தவிப்பாய் இருந்தேன்,
துணையாய் வந்தாய்,
ஆனால்
துடிப்பையே துண்டித்தாய்!

கண்ணுக்குள் வந்த காதல்,
கனவை தந்தது;
கனவாய் இருந்ததை,
களவாடி சென்றது!

கண்விழித்து காண்கையிலே,
கனவும் இல்லை,
காதலும் இல்லை,
காவியமாய் நீயும் இல்லை !

விடியலை நோக்கி
பயணிக்கிறது கண்கள்,
என் கண்ணே,
நீ தந்த கண்ணீரை சுமந்தபடியே . . . . !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக