மௌனம் உடுத்திய உதடுகள்
என் வார்த்தைகளை ஊமை ஆக்கின,
கரு விழிகள் உலர்ந்து நின்றன !
வறட்சி குறைய
கசிந்த ஈரங்கள் ,
உதிர்ந்த வார்த்தைகள்,
அதிரங்கள் வழி,
ஆழ் மனதை
அதீதமாய் சேத படுத்திவிட்டன!
பிரபஞ்சம் நீங்கி சென்ற பின்னாவது
சேதிகள் கேட்குமோ
என் செவிதனில்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக