சனி, 3 டிசம்பர், 2016

நியூ யார்க்கில் நான் . . . #1

நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம் . . . 
  
எனக்கு பிடித்த பாடல் வரிகள் . . . ஆனால், சமீபமாய் தான் இந்த பாடல் வரிகள் எத்துணை கற்பனை வாய்ந்தது என்று உணர்ந்து கொண்டேன் . . . 
சமீபத்தில், தகப்பன் தாயின் பிள்ளை என்ற பதவியுடன் கணவனின் (ஓர் சமத்து அப்பாவி பையன் பாமனைவி என்ற  "பதவி உயர்வு ( பதவி இறக்கமா என்று போக போக தான் தெரியும் ! ) பெற்று , தாயகத்தில் இருந்து இடம் மாற்று பெற்று , மேற்கத்திய தூ(ஊஊஊ...) தேசமான ஐக்கிய அமெரிக்கா நாட்டிற்கு வந்தாகிவிட்டது ! பரந்த தார் சாலைகள் , தூய்மையான ஆறு, பசுமையான மரங்கள் ( ஒரே மாதிரி  தான் இருக்கின்றன . . நம் நாட்டை போல் பல்லுயிர் தாவரங்கள் எல்லாம் தென்படவில்லை ! ), மரத்தால் ஆன வீடுகள், பாரிஸ் சாந்து கொண்ட கூரைகள், கண்ணாடி சாளரங்கள் , இடது பக்கம் ஓட்டுநர் கொண்ட உந்திகள் / வண்டிகள் . . . இப்படி அனைத்தும் ஒரு கண்ணாடி பிம்பம் போல் தெரிந்தது ! நீண்ட வெளிச்சம் கொண்ட பகல் பொழுதுகள் , குறுகிய இருட்டின மணித்துளிகள், நிலவை தேடி நடந்த வெளிச்சங்க்கொண்ட இரவு பொழுதுகள் , இப்படியாக ஆச்சர்ய பட்டு , குழம்பி , என் ஆத்துகாரரை கேள்வி கனல்கள் கொண்டு துளைத்து, பெற்றோரிடமும் புத்தி சொற்கள் கேட்டு கேட்டுகழிந்தன முதல் ஓரிரு வாரங்கள் !
வீட்டை எனக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்து, எனக்கான ஒரு உலகத்தை தயார் படுத்தி, கணவனையும் மிகையாய் படுத்தி (பாவம்,  அதிகமாய் இடது கை பழக்கம் கொண்ட  என்னோடு அனுசரித்து போவது மிகவும் சிரமமாய் இருந்திருக்கும் அவருக்கு) ஒரு வழியாய், அமெரிக்க வாழ்வில் ஐக்கியமாக தொடங்கியுள்ளது, ஒரு பெரும் சாதனை தான்
கணவனுடன் நியூ யார்க் நகரம் சுத்தி பார்க்க கிளம்பினோம், ஒரு வார இறுதியில் ! வார இறுதி என்றாலே, "காலை" 11 / 12.00 மணி வாக்கில் தான் கண் விழிப்பது. அதன் பின், சமைத்து சாப்பிட்டு, ஒரு மணி நேர பஸ் பயணம் , பின்பு 15 - 20 நிமிட மெட்ரோ ரயில் பயணம். சுமார் 4 மணி அளவில் டைம்ஸ் சுஃவைர் (times square ) அடைந்தோம் . . 
நகரமா அது  .  எத்தனை மக்கள் , எத்தனை வகையான பொழுது போக்கு, வேடிக்கை கேளிக்கை .. அப்பப்பா ! சாலை முழுதும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது . . . பற்பல ஹாலிவுட் குணச்சித்திரங்கள் வேடமிட்ட மனிதர்கள் - அவர்கோளடு விளையாட எத்தனிக்கும் குழந்தைகள், முழு நிர்வாணமாய் பெண்கள் - அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள எத்தனிக்கும் ஆண்கள் , அரை நிர்வாணக்கோலத்தில் இசை கருவிகளோடு ஆண்கள் - அவர்களை பார்த்து கிளவுற்று செல்ப்பி எடுக்கும் பெண்கள் கூட்டம் , பாட்டு பாடி அனைவரையும் மகிழ்விக்கும் தெரு கூத்து கும்பல் , இப்படி எத்துணை எத்துணை விஷயங்கள் , அந்த ரோடுகளில் . . 
மூன்று நான்கு மணி நேரம் , செலவடைந்ததே தெரியாமல் , நானும் கணவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தோம் . மாலை இரவாகியது . அப்பொழுதும் கூட்டம் குறைந்த பாடில்லை.. இரவு நள்ளிரவானது .. மக்கள் அதே போல் தான் இருந்து கொண்டே இருந்தார்கள் ! நமது நாட்டில் மதுரையை தூங்கா நகரம் என்பார்களே , அதே போல், இங்கு இந்த நியூ யார்க் நகரம், உறங்கவே இல்லை.. எங்கும் எப்பொழுதும் மின் விளக்குகள் ஜொலித்த வண்ணம் இருந்தன . . . சாலையில் மனிதர்கள் கூட்டம் அலைமோதியபடி இருந்தது . . .
இப்படி ஒரு நகரத்தை வைத்து எப்படி தான் அந்த பாடலை எழுதினாரோ அந்த கவிஞர் . . 
"நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை படர்ந்தது . . . " 
பார்ப்பவர்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள், எந்த கடைக்கு போனாலும் "Good morning! How are you doing?" "Good day, Bye" என்றெல்லாம் என்னவோ ஆண்டாண்டு காலம் பழகினார் போல் பேசுகிறார்கள் . . 


தொடர்ந்து எழுதுவேன் . . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக