திங்கள், 3 மே, 2010

நினைவுகளின் தாபத்தில்.........


மேல் இமையும் கீழ் இமையும்
தம்முள் காதல் கொண்டனவாம்...
கருவிழி இமை இடையில்
கதகதப்பாய் புதைந்து கொள்ள,

எனக்கு தான் இன்னுமும்

அவன் தோள் இல்லை நான் சாய!

குளம் கட்டிய கண்களோ

இமை காதலர்களின் தாபத்தை
நீர் ஊற்றி
அணைக்க முயல
ஈர பதத்திலும்
காதலாய் ஊடல் செய்கின்றன இவை!

மூடிய கனவுகளோடும்

தொலைந்த நினைவுகளோடும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக