
மென்மையான உள்ளமும்
ஆழமான அரவணைப்பும்,
அழியா நேசமும்,
பிரியா உணர்வாய்,
என்னுள் வளரும்
உருவற்ற கருவே!
விருப்பம் இல்லை,
உன்னை ஓர் ஆண் என கூற;
உனக்கான எனது வரிகளை
இந்த சமூகம் ஏற்காது!
பெண்ணாகவும் வேண்டாம் நீ-
இன்னுமும் இருக்கிறது
பெண் இன கழிவிரக்கம்!
உருவமே வேண்டாம் உனக்கு
உள்ளம் மட்டுமே போதும் - நீ
என்னை ஆள!
தனிமையில் துணையாய்,
துயிலில் தலை அனையாய்,
தப்புக்களில் தண்டனையாய்,
வெற்றிகளில் சந்தோஷமாய்,
நோயிலே மருந்தாய்,
இறுதி வரை எனதாய்,
எனது
மனசாட்சியாய்....!!
excellent lines .................who is that soul in those lines???
பதிலளிநீக்குvery nice da..
பதிலளிநீக்குkeep blogging...
en manasaatchi thaan.....
பதிலளிநீக்குReal Lines. Keep going.
பதிலளிநீக்கு