திங்கள், 3 மே, 2010

உனக்கே உனக்காக


மென்மையான உள்ளமும்
ஆழமான அரவணைப்பும்,

அழியா நேசமும்,

பிரியா உணர்வாய்,

என்னுள் வளரும்

உருவற்ற கருவே!

விருப்பம் இல்லை,

உன்னை ஓர் ஆண் என கூற;

உனக்கான எனது வரிகளை

இந்த சமூகம் ஏற்காது!

பெண்ணாகவும் வேண்டாம் நீ-

இன்னுமும் இருக்கிறது

பெண் இன கழிவிரக்கம்!

உருவமே வேண்டாம் உனக்கு

உள்ளம் மட்டுமே போதும் - நீ

என்னை ஆள!

தனிமையில் துணையாய்,

துயிலில் தலை அனையாய்,

தப்புக்களில் தண்டனையாய்,

வெற்றிகளில் சந்தோஷமாய்,

நோயிலே மருந்தாய்,

இறுதி வரை எனதாய்,

எனது

மனசாட்சியாய்....!!

4 கருத்துகள்: