எனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..
திங்கள், 3 மே, 2010
உனக்கே உனக்காக
மென்மையான உள்ளமும்
ஆழமான அரவணைப்பும்,
அழியா நேசமும்,
பிரியா உணர்வாய்,
என்னுள் வளரும்
உருவற்ற கருவே!
விருப்பம் இல்லை,
உன்னை ஓர் ஆண் என கூற;
உனக்கான எனது வரிகளை
இந்த சமூகம் ஏற்காது!
பெண்ணாகவும் வேண்டாம் நீ-
இன்னுமும் இருக்கிறது
பெண் இன கழிவிரக்கம்!
உருவமே வேண்டாம் உனக்கு
உள்ளம் மட்டுமே போதும் - நீ
என்னை ஆள!
தனிமையில் துணையாய்,
துயிலில் தலை அனையாய்,
தப்புக்களில் தண்டனையாய்,
வெற்றிகளில் சந்தோஷமாய்,
நோயிலே மருந்தாய்,
இறுதி வரை எனதாய்,
எனது
மனசாட்சியாய்....!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
excellent lines .................who is that soul in those lines???
பதிலளிநீக்குvery nice da..
பதிலளிநீக்குkeep blogging...
en manasaatchi thaan.....
பதிலளிநீக்குReal Lines. Keep going.
பதிலளிநீக்கு