செவ்வாய், 18 மே, 2010

ஒரு நாள்...



ஒரு நாள்
நீ என்னுடன் இருந்தால்,
உன் விரல் பிடித்து நடந்தால்
உன்னுடன் சேர்ந்து வீதியுலா வந்தால்,
உன் அருகாமையில் லயித்தால் ,
உன் பாசத்தை புரிந்தால்,
உன் நேசத்தை எனகுனர்த்தினால்,
உன் சுவாசத்தில் நான் கலந்திட்டால்,
உனக்காக நான் துடித்தால்,
உன் தோழியாய் தோள் சாய்ந்தால்,
உன் தாயாய் தலை கோதினால்,
உன் சேயாய் மடி சேர்ந்தால்,

என்னவனே!
அன்று.......
உலகின் உச்சத்தில் நான் இருப்பேன்,
இப்பிறவி பயனும் ஈடேற்றுவேன்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக