செவ்வாய், 25 மே, 2010

குளிர்நாயகனே...


சிந்தை சிதறடித்து
நின்தைகளை முறியடித்து,
நித்தம் எனை காண
நீ வருவாய் என்
காத்திருந்தேன் நானும்
சாகசப் பறவையாய்;
பூவிழிதனிலே எதிர்பார்ப்பை தேக்கியபடி..
ஒரு நாள்,
முழு மனதுடன்,
எனது மனிதனாய்..!
ஒரு நாள்,
முழு இருட்டாய்..
என்னை விட்டு தூரமாய்!!
மித நாட்களிலே
தோன்றி தேய்ந்து..
எந்தன் குளிர் நாயகனே!
ஏனடா இந்த கண் கட்டி விளையாட்டு??
முகம் புதைய தலையணை அணைப்பில்,
மனம் சிதைய..,
என்சிந்தயும் கலங்குதடா.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக