திங்கள், 24 மே, 2010

நான் ஓவியன் எனதெரிந்தும் நீ.......................


தேய்ந்து வளரும் நிலவாகி,
வளரும் மதிக்கு வானாகி,
வான் முகிலுக்கு மழையாகி,
மழை சேரும் தாய் மடியாகி,
நீர் தேடும் செடி வேராகி,

என்தோட்ட  பூக்களுக்கு பனியாகி,
வாடும் மலருக்கு மண்ணாகி,
துவளும் எனக்கு மென்னிசையாகி ,
என் கவிதைகளுக்கு கருவாகி,
இன்று என்னுள் உருவாகி நிற்கும்
என் காதலே....
என்னை என்ன செய்ய போகிறாய்..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக